வென்னப்புவ பிரதேசத்தில் நான்கு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வென்னப்புவ லேக் வீதியில் உள்ள வாகன திருத்தும் நிலையமொன்றில் பழுதுபார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு பஸ்கள் இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், அருகில் உள்ள சிசிரிவி கமராவில் இருந்து, ஒரு நபர் வந்து பஸ்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Visited 17 times, 1 visit(s) today
