ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹம்பஸ்வலான பகுதியில் பஸ் மிதிபலகையில் பயணித்த வயோதிபர் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹம்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ருவன்வெல்லவிலிருந்து தன்னொருவ நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் முன் பக்கத்தில் உள்ள மிதிபலகையில் பயணித்த வயோதிபர் ஒருவர் கீழே தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த வயோதிபர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த வயோதிபர் சுகவீனம் காரணமாக பஸ் மிதிபலகையில் அமர்ந்திருந்துள்ள நிலையில் திடீரென கீழே தவறி விழுந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
