யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம்செட்டியார் தோட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சுகந்தன் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Visited 10 times, 1 visit(s) today
