முல்லைத்தீவு கடலை காண சென்ற பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி


முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற மூன்று பெண்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (31) இடம்பெற்றுள்ளது.

உடையார்கட்டு பகுதியில் தையல் பயிற்சி பெறும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

நாயாற்றுக்கடலில் நீராடிக்கொண்டிருந்த போது அவர்களில் மூவர் திடீரென நீரில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பெண் காணாமல்போயுள்ளார்.

காணாமல்போன பெண்ணை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

47, 21 வயதுடைய பெண்களே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது 20 வயதுடைய பெண்ணே காணாமல்போயுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,

Visited 7 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *