லண்டனிலிருந்து யாழிற்கு வந்த புலம்பெயர் தமிழர் பஸ்ஸில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழைச் சேர்ந்த குறித்த புலம்பெயர் தமிழர் லண்டனில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கடந்த 17-10-2024ஆம் திகதி பஸ்ஸில் தனது உறவினர் வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது கல்வியங்காட்டு பகுதியில் பேருந்தினுள் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (27-10-2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் 56 வயதான புலம்பெயர் தமிழரே உயிரிழந்துள்ளார்.
Visited 11 times, 1 visit(s) today
