மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவன் உடனடியாக கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சிறுவனின் , மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
Visited 5 times, 1 visit(s) today
