Category: விபத்து

  • விபத்தை ஏற்படுத்திய சபாநாயகர் அசோக ரங்வல கைது

    விபத்தை ஏற்படுத்திய சபாநாயகர் அசோக ரங்வல கைது

    சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ரங்வல, மதுபோதையில் இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து பொய்யானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு ரங்வல, கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மாநில ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. சபுகஸ்கந்தாவின் டெனிமுல்லா பகுதியில் வியாழக்கிழமை மாலை…

  • விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

    விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

    கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார். கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது இப்புனுள்ளா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். ​மீன் வியாபாரியான இவர், இன்றைய தினம் கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார். அதன் போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே…

  • சாய்ந்தமருது கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து ஒரே குடும்பத்தில் மூவல் பலி

    சாய்ந்தமருது கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து ஒரே குடும்பத்தில் மூவல் பலி

    அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய…

  • கொழும்பில் இருந்து சென்ற புகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு

    கொழும்பில் இருந்து சென்ற புகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு

    கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவைக்கு அருகில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நல்லூர் பகுதியைச் சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • இலங்கையில் கோர விபத்து ; பரீட்சைக்கு சென்ற மாணவர் உட்பட 6 பேர் பலி; 50 பேர் காயம்

    இலங்கையில் கோர விபத்து ; பரீட்சைக்கு சென்ற மாணவர் உட்பட 6 பேர் பலி; 50  பேர் காயம்

    அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய உயர்தர மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தனியார் பஸ் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

  • யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி

    யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் (3) இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் , வீதியில் விழுந்த வேளை வீதியில் வந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம்…

  • பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் உறவினர்களின் திருமணம் கடந்த மாதம் 15-ம் தேதி தாண்டூரில் நடந்தது. இதற்காக 3…

  • கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

  • திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். நேற்று(16) அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப்…

  • யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

    யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை…