Category: இந்தியா

  • இந்தியாவில் சொகுசு பேருந்தில் தீயில் கருகிய 25 பயனிகள் ; அதிகாலையில் உறக்கத்தில் பயங்கரம்

    இந்தியாவில் சொகுசு பேருந்தில் தீயில் கருகிய 25 பயனிகள் ; அதிகாலையில் உறக்கத்தில் பயங்கரம்

    இந்தியாவில் பஸ் ஒன்று தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வியாழக்கிழமை (23) இரவு பஸ் புறப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் 42 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று செள்ளிக்கிழமை (24) அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள்…

  • திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்

    திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்

    இந்தியா – திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் பிணையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, ரிதன்யாவுக்கு சொந்தமான 2 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு நேற்று  விசாரணைக்கு…

  • கரூர் சம்பவம்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    கரூர் சம்பவம்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இது தொடர்பாக பல வழக்குகள் நடந்து வருகின்றன. இடையே தமிழக அரசு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தையும் அமைத்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி…

  • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; வதந்தி பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

    விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; வதந்தி பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

    தமிழகத்தின் கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த…

  • விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: இலங்கைப் பெண்ணை விசாரிக்க உத்தரவு

    விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: இலங்கைப் பெண்ணை விசாரிக்க உத்தரவு

    தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது. மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் என்ற குறித்த பெண் தமிழ்நாட்டின் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகவரத்தினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். இது…

  • ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்

    ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்

    மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் 4 குழந்தைகளை சுமந்து வந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சையில் 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர்.  

  • இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்

    இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (12) தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 15-வது துணை ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கிறனர். துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களவை தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு…

  • டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது!

    டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது!

    டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பயங்கரவாதிளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உதிரிப் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆல் ஈர்க்கப்பட்டு ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கைது செய்யப்பட்டர்களில் பலர் இரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், டெல்லி, மும்பை, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும்…

  • அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

    அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

    இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல,…

  • இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல ; இந்தியா

    இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல ; இந்தியா

    போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும்…