-
யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளை மீறிச்சென்ற இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்துள்ளனர். இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச்…
-
யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு…
-
பருத்தித்துறையில் வீதிக்கு இறங்கிய வியாபாரிகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பருத்தித்துறை நகரிலிருந்து அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி இடம்பெறுகிறது. இதில் 200 வரையான வர்த்தகர்கள் இணைந்திருக்கின்றார்கள். பருத்தித்துறை நவீன சந்தை பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி நகரசபை வரை சென்றடையவுள்ளது.
-
பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த இளைஞர்

பிரான்சில் பல்வேறு நாடுகளுடன் துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து செவ்வாய்க்கிழமை (22) அன்று பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பூர்வீகமாகக் கொண்ட குறித்த 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததாக குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து இவ்வாறு கூறிய அவர்…
-
யாழில். வைத்தியசாலை சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்

ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டதால் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியவர் , கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் , திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , நிமோனியாவினால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணைகளில்…
-
மாற்றம் ஒன்றே மாறாதது ; சுமந்திரன் நல்லம்

மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு. ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம்…
-
யாழில் அதிசயம், ஆனால் உண்மை… மழையுடன் விழுந்த மீன்கள்

அண்மைய நாட்களாக யாழில் பெய்து வரும் மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகின்றது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன. அந்த மீன்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் யாழில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
யாழில் போதை தலைக்கேறியதால் யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய…
-
தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டில்…
-
யாழில் வாடகைக்கு வீடு பெற்று தங்க ஆபரணங்கள் கொள்ளை

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் அவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 7 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவம்…