-
அமெரிக்கா கோர விபத்தில் இந்திய தம்பதி உயிரிழப்பு

அமெரிக்காவின் வொஷிங்டனில் நிகழ்ந்த கோர விபத்தில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்தனர். அவர்களது இரண்டு பிள்ளைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் பாலக்கொல்லு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண கிஷோர் (45) என்ற மென்பொருள் பொறியியலாளர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவி ஆஷா (40) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 4) அதிகாலை, இவர்கள் குடும்பத்துடன் சிற்றூந்தில் சென்று கொண்டிருந்தபோது, தவறான திசையில் அதிவேகமாக…
-
யாழ் ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை மரணத்தில் புதைந்துள்ள மர்மம் என்ன?

யாழ் பல்கலைக்கழக கல்வித்துறையின் தலைவரராணசிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன் அவர்களின் மனைவியான ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை நிசாந்தினி தீ விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நித்தியவர்ணனும் மனைவியும் கொழும்புக்கு சென்று திரும்பி அதிகாலை வீட்டுக்கு வந்த பின்னா அங்கு இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே குக்குரல் கேட்டதாகவும் அயலவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் விரிவுரையாளர் மற்றும் அவரது மனைவி நிசாந்தினி ஆகியோர் தமது வீட்டுக்கு வாகனம்…
-
யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
-
யாழில். வாடகைக்கு அறை எடுத்து மோசமான செயல்; அதிரடியில் சிக்கிய பலர்

யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான இருவர் , போதைப்பொருள் பாவனை காரணமாக வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டு , வீட்டை விட்டு வெளியேறி நகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றினை பெற்று தங்கியுள்ளனர். அறையில் தங்கியிருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தமது வருமானத்திற்காகவும் , மேலும்…
-
இளங்குமரன் எம்.பி க்கு எதிராக சுமந்திரன் வழக்கு

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இளங்குமரன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சாமர நாணயக்கார, கஜபாகுவுக்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரியதால் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் அங்கிருந்து கடந்த மே 29ஆம் திகதி பலாலி…
-
பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள்…
-
பிரித்தானியா பள்ளிவாசல் மீது தீ வைப்பு; வெறுப்புக் குற்றமா?

பிரித்தானியாவின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தீ வைப்பு தாக்குதலை “வெறுப்பு குற்றம்” என ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸார் விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு சசெக்ஸின் பீஸ்ஹேவனில் உள்ள ஃபிலிஸ் அவென்யூவில் சனிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு தீ வைப்பு தாக்குதல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக, அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் பள்ளிவாசலின் முன் நுழைவாயில் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களில்…
-
யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

தமிழ் மக்களுக்காய் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
-
பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு

தேசிய சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர் பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேரூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரேரணைக்கு ஆதரவாக 364 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 194 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்தநிலையில், பிரதமர் பிரான்சுவா பேரூ தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பிரான்சுவா பேரூ , இரண்டு பொது விடுமுறை நாட்களை ரத்து செய்தல் மற்றும் அரச செலவினங்களை முடக்குதல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 44…
-
மீண்டும் விசாரணைக்கு வரும் புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதிகளின் மேல் முறையீட்டை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. புங்குடுதீவை சேர்ந்த மாணவியை கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் “ட்ரையல் எட் பார்” முறையில் நீதிபதிகளான சசி மகேந்திரன் , ம. இளஞ்செழியன் மற்றும் அ.பிரேமசங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று சுவிஸ் குமார்…