-
வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல் – பிஎன்பி நிர்வாகி உயிரிழப்பு

வங்கதேசத்தின் குல்னா சாதார் பகுதியில் ஆலியா மதரசா வாக்குச்சாவடியில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வங்கதேச தேசியவாத கட்சியை (பிஎன்பி) சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பிஎன்பி கட்சியின் குல்னா மெட்ரோபாலிட்டன் பகுதியின் முன்னாள் செயலாளர் மொஹிபுஸாமன் கொச்சி தாக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (12) காலை இரு குழுக்களிடையே விவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது, மொஹிபுஸாமன் கொச்சிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…
-
கனடாவில் பயங்கரம்; பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்குள் நேற்று மதியம் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை…
-
இலங்கையில் செல்வாக்கு மிக்கவர் கனடாவில் கைது!

கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேக…
-
சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்; பிரான்சில் போராட்டம்

சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன. பிரான்சில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதும் அதற்கு மத்தியில் பலரும்…
-
ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்; லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க…
-
சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் இந்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் ஊடாகப் பல கோடி ரூபாய் மோசடிகளைச் செய்துள்ளதாகக்…
-
நான் ஒரு போர்க்கைதி வெனிசுவேலா மதுரோ அமெரிக்க நீதிமன்றத்தில் ஆவேசம்

அமெரிக்கப் படையினரால் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் நேற்று நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பான மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் அமைந்திருந்தது. மதுரோ நீதிமன்ற அறைக்குள் நுழையும் முன்னரே, அவரது கால்களில் கட்டப்பட்டிருந்த இரும்பு விலங்குகளின் ஓசை நீதிமன்ற அறை முழுவதும் எதிரொலித்தது. உள்ளே நுழைந்த மதுரோ, பார்வையாளர் வரிசையில் இருந்த பலரைப் பார்த்துத் தலையசைத்து, ஸ்பானிஷ் மொழியில் ‘புவனோஸ் டயஸ்’ (காலை…
-
சுவிற்ஸர்லாந்தில் புத்தாண்டில் பெரும் தீ விபத்து ; 40ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

சுவிற்ஸர்லாந்து கிரான்ஸ் – மொன்டானா (Crans-Montana) என்ற ரிசோர்ட் நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் சுமார் 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு நேரப்படி, நேற்று (ஜன. 1) அதிகாலை 1.30 மணியளவில் பாரில் விருந்தினர்கள் அனைவரும் புத்தாண்டு நிகழ்வுகளில் மூழ்கியிருந்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,…
-
சுவிட்சர்லாந்தில் இலங்கை பெண்ணைக் கொலை செய்த கணவன் மற்றும் சகோதரன்; கடுமையான தண்டனை

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திட்டமிட்ட வகையில் மனைவியை கொ*லையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத் தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி, மர்மமான முறையில் உயி*ரிழந்தார். குற்றவாளிகள் இணைந்து கொ*லை செய்த…
-
கனடா மருத்துவமனையில் சிகிற்சைக்காக 8 மணிநேரம் காத்திருந்த இந்தியர் மரணம்

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், சிகிச்சை கிடைக்காத நிலையில் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள ‘கிரே நன்ஸ்’ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு,…