பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2023 மே 28 அன்று கொழும்பில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியில், பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்களால் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டார்.
அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகிக்கொண்டிருந்த போது, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், நடாஷா எதிரிசூரியவின் வைரல் வீடியோ பதிவிடப்பட்ட ‘SL VLOG’ என்ற யூடியூப் சேனலின் உரிமையாளரான புருனோ திவாகராவும் சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பாக 31 மே 2023 அன்று கைது செய்யப்பட்டார்.
திவாகர ஜூன் 21 அன்று நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார், எதிர்சூரிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பின்னர் ஜூலை 05 அன்று பிணை வழங்கப்பட்டது.
