அகதியாக வாழ் விருப்பமில்லை ; ஜேர்மனியில் யாழ் இளைஞர் தற்கொலை


ஜேர்மனியில் யாழ்ப்பாண்ம் – ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் வயது 25 என்ற இளைஞன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமி அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி முகாமில் பதிவு செய்து முகாமில் தாங்கவைக்கப்பட்டுள்ளார் .

விசாஇன்மை ,வேலைஇன்மை தனிமை ,மொழிப் பிரச்சனை நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரத்திக்குள்ளாகி அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி வந்ததாக கூறப்படுகின்றது

குடும்பத்தினரும் போன காசை உழைச்சிக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் மனவிரத்திக்கு சென்று இன்று செவ்வாய் அதிகாலை 2:30 முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *