கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவைக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நல்லூர் பகுதியைச் சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Visited 3 times, 1 visit(s) today
