-
பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த இளைஞர்

பிரான்சில் பல்வேறு நாடுகளுடன் துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து செவ்வாய்க்கிழமை (22) அன்று பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பூர்வீகமாகக் கொண்ட குறித்த 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததாக குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து இவ்வாறு கூறிய அவர்…
-
யாழில். வைத்தியசாலை சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்

ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டதால் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியவர் , கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் , திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , நிமோனியாவினால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணைகளில்…
-
யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் போதை பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரிடமிருந்தும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், வன்முறை கும்பலை சேர்ந்தவரின் உடமையில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை வன்முறை கும்பலை சேர்ந்த…
-
இஷாராவை தப்பிக்கவைத்தவரே ஈஸ்டர் கொலையாளிகளையும் தப்பிக்க வைத்தவர்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏறிய ஆனந்தன் என்ற முக்கிய சந்தேக நபர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களை கடல் வழியாக தப்பிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகவும் இஷாரா செவ்வந்தியிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சகோதர மொழி ஊடகமொன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட…
-
மாற்றம் ஒன்றே மாறாதது ; சுமந்திரன் நல்லம்

மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு. ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம்…
-
யாழில் அதிகாலையில் அதிரடிப்படையிடப்பட்ட முற்றுகையிடப்பட்ட வீடு!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் குறித்த இளைஞனின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் குறித்த இளைஞன் இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ள பொலிஸார் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட…
-
யாழில் அதிசயம், ஆனால் உண்மை… மழையுடன் விழுந்த மீன்கள்

அண்மைய நாட்களாக யாழில் பெய்து வரும் மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகின்றது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன. அந்த மீன்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் யாழில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-
யாழில் போதை தலைக்கேறியதால் யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய…
-
இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரின்போது 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரணடைந்தனர். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும் மக்களுடன் மக்களாகச் சரணடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உடை உணவு, மருந்து என்பவற்றை வழங்கி, புனர்வாழ்வில் இருந்து செல்லும் வரை அனைவரையும் முறைப்படி பாதுகாத்தோம். எனினும், இறுதிப்போரின் போது…
