28 ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாகக் கீழே விழுந்த பின் அந்த நபரையும், கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேரூந்து ஒன்று சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பேரூந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்தனர்.

இரு நண்பர்களும் பயணத்தை மேற்கொண்ட போது இரு நண்பர்களில் ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேறு காரணத்தாலோ கீழே விழுந்து உள்ளார்.
அதனை அவதானித்த கூட வந்த நண்பர் பேரூந்தை நிறுத்துமாறு சத்தம் எழுப்பியுள்ளார்.
கூட வந்த நண்பரின் சத்தத்தால் பேரூந்தில் இருந்த பயணிகள் தூக்கத்தால் எழும்பியும் நடத்துனர் காதில் அந்த சத்தம் விழவில்லையாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின் பயணிகளின் சொந்தரவால் நடத்துனர் நண்பரின் கோரிக்கைக்கு இணங்க பேரூந்தை சுமார் 1km தூரத்திற்கு அப்பால் பேரூந்தை நிறுத்தியுள்ளார்.
பின் சிறிது நேரத்தின் பின் விழுந்த நபரையும், அவரின் நண்பரையும் இடையிலே விட்டுவிட்டு பேரூந்து புறப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கூட வந்த பயணிகள் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்லுமாறு சாரதியையும் நடத்துனரையும் கேட்ட போது, அவர்கள் பயணிகளின் கருத்துக்கு இடமளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
