2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும்.
அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை 50 வீத வாக்களிப்பு வீதம் இருக்கவில்லை. அதோடு வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
12 மணிவரை வாக்களிப்பு வீதம்
நுவரெலியா – 30 %
பதுளை – – 36 %
மொனராகலை – 32 %
அனுராதபுரம் – 30 %
யாழ்ப்பாணம் – 18 %
மன்னார் – 40 %
வவுனியா – 39.5 %
திகாமடுல்ல – 31%
கம்பஹா – 20 %
மாத்தறை – 42 %
களுத்துறை 20 %
பொலனறுவை – 34 %
கொழும்பு – 28 %
புத்தளம் – 36 %
காலி – 35 %
இரத்தினபுரி – 30 %
அம்பாந்தோட்டை – 19 %
கிளிநொச்சி – 22 %
மாத்தளை – 25 %
கேகாலை – 33 %
கண்டி – 21 %
மட்டக்களப்பு – 23 %
குருநாகல் – 30 %
திருகோணமலை – 36%
