Tag: Accident

  • ரவிராஜ் ராஜ்கிரன் – வவுனியா இளைஞனின் மரணத்தின் பின்….

    ரவிராஜ் ராஜ்கிரன் – வவுனியா இளைஞனின் மரணத்தின் பின்….

    ரவிராஜ் ராஜ்கிரன் – ஒரு இளைஞனின் மரணத்தின் பின் அவரால் இரண்டு உயிர்களை காப்பாற்றியமை மானிடவியல் மனிதநேயத்தை எடுத்துக்காட்டுகின்றது. வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கிரன் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கிக் கொண்டார். எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான அடிபட்ட காயம் காரணமாக அவர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டார். உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டார். யாழ்ப்பாணத்தில் சிடி…

  • விபத்தை ஏற்படுத்திய சபாநாயகர் அசோக ரங்வல கைது

    விபத்தை ஏற்படுத்திய சபாநாயகர் அசோக ரங்வல கைது

    சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ரங்வல, மதுபோதையில் இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து பொய்யானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு ரங்வல, கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மாநில ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. சபுகஸ்கந்தாவின் டெனிமுல்லா பகுதியில் வியாழக்கிழமை மாலை…

  • விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

    விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

    கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார். கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது இப்புனுள்ளா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். ​மீன் வியாபாரியான இவர், இன்றைய தினம் கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார். அதன் போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே…

  • கொழும்பில் இருந்து சென்ற புகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு

    கொழும்பில் இருந்து சென்ற புகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு

    கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவைக்கு அருகில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நல்லூர் பகுதியைச் சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • சவுதி அரேபியாவில் கோர விபத்து; 42 இந்தியர்கள் பலி!

    சவுதி அரேபியாவில் கோர விபத்து; 42 இந்தியர்கள் பலி!

    சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியவைச் சேர்ந்த 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில், மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முஃப்ரிஹாத் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும்…

  • யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி

    யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் (3) இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் , வீதியில் விழுந்த வேளை வீதியில் வந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம்…

  • பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் உறவினர்களின் திருமணம் கடந்த மாதம் 15-ம் தேதி தாண்டூரில் நடந்தது. இதற்காக 3…

  • கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

  • திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். நேற்று(16) அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப்…

  • யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

    யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை…