-
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை; சகோதரகள் கைது

கொழும்பு புறநகரான் அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு…
-
பெண் கைதியால் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை; பொலிஸார் ஷாக்

கல்கிசை, பிரிவேனா வீதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 பணம் மற்றும் 30 போலி எண் தகடுகளை கல்கிசை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு மின்னணு தராசு, இரண்டு தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க வளையல், ஒரு…
-
கொழும்பு துப்பாகிச்சூடு; 4 வயதுடைய சிறுவனும், 3 வயதுடைய சிறுமியும் காயம்

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். இதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன்,…
-
ஊடகவியலாளரை இழிவுபடுத்திய அர்ச்சுனா ராமநாதன்: ஊடக அமைப்புகள் மௌனம்

ஊடகவியலாளரை இழிவுபடுத்திய அர்ச்சுனா ராமநாதன்: ஊடக அமைப்புகள் மௌனம் காப்பது ஏன்? ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளரை “பிச்சைக்காரன்” என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்த அர்ச்சுனா ராமநாதனின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஊடக சங்கங்களின் நடவடிக்கை என்ன?: சக ஊடகவியலாளர் ஒருவர் பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்ட பிறகும், இலங்கையில் உள்ள ஊடக சங்கங்களும் அமைப்புகளும் ஏன் இன்னும் மௌனம் காக்கின்றன? இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது எடுக்கப்படப்போகும் சட்ட நடவடிக்கை…
-
அர்ச்சுனா எம்பிக்கு பிடியாணை உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. கோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக ராமநாதன் அர்ஜுனா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.…
-
கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட பகீர் தகவல்; பொலிஸார் சுற்றிவளைப்பு!

பொலிஸ் தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான ”கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான ஆயுதங்கள் சிலவற்றை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து வெளியான தகவலினடிப்படையில் எண்டேரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் பராமரிப்பில் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும்,…
-
3 காதலிகளுக்காக திருடிய 18 வயது காதலன்

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினகற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட பணத்தை பயன்படுத்தி, 27 வயதான மூன்று குழந்தைகளின் தாயாகிய பெண்ணிற்கும், டிக்டொக் மூலம் அறிமுகமான மேலும் இரண்டு காதலிகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகள் வாங்கி…
-
ஆடைகடையில் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா!

தலவத்துகொடையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள ஆடை மாற்றும் அறையில் இரகசியமாக கெமரா வைத்த கடையின் உரிமையாளரை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்ததில், இளம் பெண்கள் ஆடைகளை மாற்றும் 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் 43 வயதான கொட்டாவ, பங்களாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த காணொளிகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையதளங்களில் விற்பனை செய்தாரா என காவல்துறையினர் சந்தேகித்து வருகின்றனர். சம்பவம்…
-
கொழும்பில் திடீரென இடிந்து விழுந்த 5 வீடுகள்

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தை பிரசவித்த வௌிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார். இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வதற்காக விமான நிலையத்தின் இடைமாறு பயணிகள் முனையத்தில் (Transit terminal) காத்திருந்துள்ளார். இதன்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக…