-
பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமலின் பெயர்? வெளிவரப்போகும் உண்மைகள்!

நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்று பெக்கோ சமனின் தொலைபேசியில் உள்ளதாகவும் , விரைவில் உண்மை வெளிவருமெனவும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங் களை ஒழிப்பதற்கான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், போதைப்பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்த்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை…
-
யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு…
-
யாழில் அதிகாலையில் அதிரடிப்படையிடப்பட்ட முற்றுகையிடப்பட்ட வீடு!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் குறித்த இளைஞனின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் குறித்த இளைஞன் இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ள பொலிஸார் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட…
-
யாழில் போதை தலைக்கேறியதால் யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய…
-
பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள்…
-
முல்லைத்தீவில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரின் மோசமான செயல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் அவர்களுடன் குறித்த வீட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர்…
-
கொழும்பில் போதைக்கு அடிமையான கணவனால் இளம் பெண் எரித்துக்கொலை

கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் ரிக்ரொக் சமூக ஊடக பிரபலமான 29 வயதுடைய இளம் தாயாவார். பெண்ணின் கணவர் வீட்டின் கூரையை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, பெட்ரோல் போத்தலைக் கொண்டு…
-
போதைப்பொருள்காரர்களைக் நாம் கட்டியணைக்கவில்லை; ஆனந்த விஜேபால – நாமல் தகராறு

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி என்பவர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஒருங்கிணைப்பு செயலாளராக செயற்பட்டு வந்தவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் நாமல் ராஜபக்ஷவின் உரைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கொள்கலன்கள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினை குறித்துக் கிடைக்கும் முறைப்பாடுகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே போன்று போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த முற்பட்டு…
-
மகிந்த இடத்தில் 624 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்காலை பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வீட்டையும் அதன் சுற்றுப் பகுதியிலும் தேடுதல் நடத்திய போது மூன்று லொறிகளிலிருந்து 624 கிலோ நிறையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரி 56 ரக துப்பாக்கி என ஐந்து துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த…
-
வீடொன்றில் மீட்கப்பட்ட இரு சடலங்கள்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும்…