Tag: Mannar

  • கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளி; இப்படி ஒரு அவலமா?

    கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளி; இப்படி ஒரு அவலமா?

    யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர், கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பதிவாகியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் ‘சீட்டு’ முறையில் பணம் கட்டியுள்ளார். ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல தங்கள்…

  • மன்னாரில் 32 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட வீதி

    மன்னாரில் 32 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட வீதி

    மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு காணப்பட்ட வீதி, மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது. குறித்த வீதி மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி மற்றும் இராணுவ பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்தது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் அவ்விடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய…

  • மன்னாரில் வெள்ள நீர் பள்ளத்தில் விழுந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு

    மன்னாரில் வெள்ள நீர் பள்ளத்தில் விழுந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு

      வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட 15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது உயர்தர மாணவன் அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அனர்த்த பிதேசங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • மன்னாரில் ஆயிரக்கணக்கான கால் நடைகளை உயிரிழப்பு

    மன்னாரில் ஆயிரக்கணக்கான கால் நடைகளை உயிரிழப்பு

    மன்னாரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இந் நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த…

  • எனது பெயருக்கும், கௌரவத்திற்கு பங்கம் ; சீறிப்பாயும் செல்வம் அடைகலநாதன்

    எனது பெயருக்கும், கௌரவத்திற்கு பங்கம் ; சீறிப்பாயும் செல்வம் அடைகலநாதன்

    எனது பெயருக்கும், கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக் கூடிய வகையிலும், இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.அவரிடம் ஐந்து கோடி ரூபாய்…

  • வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்ம மரணம்

    வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்ம மரணம்

    மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராக வும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது. சடலத்தை…

  • மன்னாரில் மதபோதகர் போர்வையில் மோசடி

    மன்னாரில் மதபோதகர் போர்வையில் மோசடி

    மதபோதகர் என்ற போர்வையில் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முத்தரிப்புத்துறை, வங்காலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மக்களிடம் ஒருதொகை பணத்தையும் சந்தேகநபர் திரட்டியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்களிடமிருந்து திரட்டியப் பணத்தை நானாட்டானிலுள்ள வங்கியொன்றில் அவர் வைப்பிலிட்டுள்ளார். இந்த நிலையில் மன்னார் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது விடயங்களை ஆராய்ந்த மன்னார் நீதவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  • ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் 180 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மன்னார் வாசிகள்

    ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் 180 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மன்னார் வாசிகள்

    மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும்…

  • மன்னாரில் பொலிஸ் காவலில் இருந்தவர் அடித்துக் கொலை

    மன்னாரில் பொலிஸ் காவலில் இருந்தவர் அடித்துக் கொலை

    மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தடுப்பு காவலில்…

  • கடலில் தத்தளித்த இலங்கை குடும்பம் மீட்பு

    கடலில் தத்தளித்த இலங்கை குடும்பம் மீட்பு

    தலைமன்னார் கடற்பகுதியில் மனித கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு வந்தவர்கள் வவுனியா, மடு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 8 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடற்படையினரின் காவலில் எடுக்கப்பட்டபோது அவர்கள் நீரிழப்பு மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு தலைமன்னார் காவல்துறையினரிடம்…