-
மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் கடற்பகுதியில் சடலமாக மீட்பு!

மன்னாரில் உள்ள சௌத் பார் கடற்பகுதியில் மிதந்து வந்த நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (30-12-2024) காலை இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு என்ற குடும்பஸ்தர் கடந்த 28 ஆம் திகதி முதல்…
-
மன்னாரில் கர்ப்பிணி உயிரிழப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடுகிறது பொலிஸ்

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் ,டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வைத்தியசாலையின் CCTV கெமராக்கள் மற்றும் போராட்டத்தின் போது…
-
4 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் சிக்கிய நபர்

சுமார் 4 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா பொதியுடன், மன்னார் உயிலங்குளப் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (18.11) திங்கள், மாலை, குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட, குற்றத் தடுப்பு, பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலினடிப்படையில், மன்னார் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தள்ளாடி சந்தியில் வைத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், மேலதிக விசாரணைகளுக்காக…
-
வாக்காளர்களுக்கு வழங்கவிருந்த உலர் உணவு பொருட்கள் பறிமுதல்!

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை (13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து வாகனம் ஒன்றை சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டது. இதன் போது…
-
மன்னாரில் முதல் பெண் மாவீரர் மாலதியின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (10) மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,உறவினர்கள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
-
மன்னார் நீதிமன்ற நீதிபதியின் அவதூறு சுவரொட்டிகள் தொடர்பில் மேலும் இருவர் கைது!

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து அவதூறான சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகள் குழுவினால் நேற்று (03) மாலை களனி மற்றும் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அம்பகொட்டே மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 41 வயதுடையவர்கள்…
-
அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உயிரிழந்த நபர்

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் வியாழக்கிழமை(26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிலங்குளம் முதலை குத்தி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய அந்தோனி தெய்வீகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பா.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டு சடலத்தை மன்னார் மாவட்ட பொது…
-
மன்னார் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சட்டம் நடைமுறை!

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென பொலிஸ்சாரால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதுடன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அதேவேளை மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கவனிப்பார் இன்றி கிடக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி!

மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால் அசுத்தம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் அடிகளார் ஈழத்தமிழர்களின் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பில் பெரும் பங்காற்றி தமிழுக்காக உயிர் நீத்தவர். அவரது தியாகம் உலகறியும் அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு தனிநாயகம் அடிகளாரின் நினைவு தூபி அமைக்கப்பட்டு…
-
சிந்துஜா மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அந்த வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர்கள் குழுவினால், சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலை அடைவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் சில பணியாளர்களின் கவனயீனத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இச் சம்பவத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய துறைசார் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான சுகாதார அமைச்சின்…