Tag: Puttalam

  • கடலில் மிதந்த வந்த போத்தலிலிருந்த திரவத்தை அருந்திய இருவர் மரணம்

    கடலில் மிதந்த வந்த போத்தலிலிருந்த திரவத்தை அருந்திய இருவர் மரணம்

    புத்தளத்தில் கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு போத்தலில் இருந்து திரவத்தை உட்கொண்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, மேலும் இருவர் தற்போது புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி குடிலில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை உட்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு, மீன்பிடி குடிலில் மற்றொரு நபரின்…

  • துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு

    துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு

    புத்தளம் மாரவில, மாரண்டா பகுதியில் நேற்றைய தினம் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பெண் தனது வீட்டின் முன் இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அருகில் இருந்த 10 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  • கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் வேண்டாம்; வீதிக்கு இறங்கிய மக்கள்

    கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் வேண்டாம்; வீதிக்கு இறங்கிய மக்கள்

    கொழும்பு – கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கல்வி பயின்ற இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த ஆசிரியரையும்…

  • இளைஞன் கொலையில் மாமாவும் அத்தையும் கைது

    இளைஞன் கொலையில் மாமாவும் அத்தையும் கைது

    புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞனின் மாமாவும் அத்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயின் இளைய சகோதரனும் அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞனின் மாமா…

  • கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை பலி

    கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை பலி

    புத்தளம் ஆரச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆராச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த தெனஹண்டிகே வினுகி ஹன்சிமா என்ற பெண் குழந்தையே கழிப்பறை குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை மாலை (06) உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை, மேலும் அவரது தாயார் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது, ​​அவரது மூத்த சகோதரி மற்றும் சகோதரர், சிறுமியுடன்…

  • திருட்டு வாகனம் பறிமுதல்; நாடாளுமன்ற உறுப்பினர் தப்பி ஓட்டம்

    திருட்டு வாகனம் பறிமுதல்; நாடாளுமன்ற உறுப்பினர் தப்பி ஓட்டம்

    சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வாகனம் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதால், சம்பந்தப்பட்ட வாகனம் தொடர்பாக வாக்குமூலம் பெற விசாரணை அதிகாரிகளால் முடியவில்லை. தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் இணைந்து இந்த வாகனத்தை…

  • நாயால் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

    நாயால் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

    புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ராஜாங்கனை, அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் நேற்றிரவு (05-01-2025) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முச்சக்கரவண்டி, வீதியைக் கடக்கின்ற நாயுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த சிறுவனும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தார்.…

  • மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

    மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

    புத்தளம் மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கியதில், 3 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் (29) ஞாயிற்றுக்கிழமை, கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டிடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்கு ஆயத்தங்கள் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களே , மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளனர். சம்பவத்தில் புத்தளம் சோல்ட்டன் பகுதியைச் சேர்ந்த இருவரும் , மதீனா நகரைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் புத்தளம் தள வைத்தியசாலையில்…

  • ரயில் முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த 20 வயது இளம் பெண்!

    ரயில் முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த 20 வயது இளம் பெண்!

    புத்தளத்தில் யுவதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தல் தொடக்கம் மங்களஎளிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட நவன்டான்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அலுவலக ரயில் இன்றையதினம் (16) காலை முந்தல் – நவன்டான்குளம் பகுதியில்…

  • நண்பர்களுடன் இரவு மது அருந்திய நபர் அதிகாலை மர்மமான முறையில் மரணம்!

    நண்பர்களுடன் இரவு மது அருந்திய நபர் அதிகாலை மர்மமான முறையில் மரணம்!

    மதுரங்குளிய, வஜிரவத்தை வீதிச் சந்திக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று (10-12-2024) அதிகாலை இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் மதுரங்குளிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவித்த…