-
தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டில்…
-
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்

இந்தியா – திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் பிணையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, ரிதன்யாவுக்கு சொந்தமான 2 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு…
-
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; வதந்தி பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தின் கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த…
-
ஏங்க…. ஒரே வீடியோவில் பிரபலமான கூமாப்பட்டி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

ஒரே வீடியோவில் பிரபலமான கூமாப்பட்டி தங்கபாண்டி, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பியபோது பேருந்தில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கிராமத்தை தங்கப்பாண்டி ஒரே வீடியோவில் மிகவும் பிரபலமானார். அந்த வீடியோவில் ஏங்க எங்க ஊரை பாருங்க. தமிழ்நாட்டில் இப்படியொரு ஊர் இருக்கா, உலகத்துல இப்படியொரு ஊர் இருக்கா?, உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூமாப்பட்டிக்கு வந்து…
-
பிரியாணில வெஜிடபிள் இல்ல ; தவெக தொண்டர்கள் கோபம்!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் உணவு கடைகளில் தரம் குறைவான உணவு அதிக விலைக்கு விற்கப்படுவதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரை அருகே பாரபத்தியில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை மாநாட்டு பந்தலில் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கு வழங்குவதற்காக இனிப்பு பையும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதலே…
-
காதலனை கரம் பிடிக்க கடல் தாண்டி இலங்கை காதலி ஓட்டம்

காதலனை கரம் பிடிப்பதற்காக இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படகில் கடல் தாண்டி தனுஷ்கோடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கை மன்னார் ஆண்ட குளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா என்ற குறித்த…
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் பெற பாதயாத்திரை செல்லும் நடிகர் கூல் சுரேஷ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் பெற வேண்டி திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை செல்வதாக நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 3 நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவர் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் அவர் உடல்நலம் பெற வேண்டி நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், வடபழனி முருகன் கோவிலில் பூஜை செய்து, பூசணிக்காய் மற்றும் தேங்காய்…
-
யாழிற்கு வரும் பித்தலாட்ட சாமி திருவண்ணாமலை அன்ன பூரணி

தமிழகத்தில் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான அன்னபூரணி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. திருவண்ணாமலையில் ஆச்சிரமம் நடத்தும் அன்னபூரணி தான் ஆதிபாராசக்தியின் வடிவம் என பலருக்கும் ஆசி வழங்கி வருகின்றார். தனது தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அன்னபூரணி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
-
கல்யாண ராணி நிகிதாவின் மோசடி லீலைகள் அம்பலம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோயிலின் தற்காலிக காவலாளியாக இருந்த அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது மறுபுறம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. அவர் மீது பல பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பல திருமண மோசடிகள் அவர் மீது இருப்பதும்…
-
அஜித் குமாரை அடித்துகொலை செய்த தமிழ்நாடு பொலிஸ்; பிரேத பரிசோதனை அறிக்கை

கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக மாவட்டமான சிவகங்கை, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றிருந்தனர். ஆனால், அஜித் குமார் தனிப்படை பொலிஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் வரும் 8-ம்…