Tag: Tamils

  • மாவீரர் தினத்தினை முன்னிட்டு முடங்கியது யாழ்ப்பாணம்

    மாவீரர் தினத்தினை முன்னிட்டு முடங்கியது யாழ்ப்பாணம்

    மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பானம் . தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும் , மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் தென்மராட்சியில் நடைபெற்றது. தென்மராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் , ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி…

  • யாழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

    யாழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகள் , சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு , பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு , வெடி கொளுத்தி  பெரியளவிலான கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ,…

  • ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம்

    ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு  போராட்டம்

    மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தயில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.…

  • எம்.பி அர்ச்சுனாவுக்கு சிறீதரனின் மகன் சவால்

    எம்.பி  அர்ச்சுனாவுக்கு சிறீதரனின் மகன்  சவால்

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி சிவஞானம் சிறீதரனின் மகன் சாரங்கன், எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு திறந்த சவால் ஒன்றை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில், “ஒரு சோலார் நிறுவனம் சாரங்கனுக்கு 30 மில்லியன் வழங்கி அனுமதி பெற்றது” என்று அர்ச்சுனா கூறியதாகவும், அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட அவர் கோரியுள்ளார். நீங்கள் என்னை பற்றி கூறிய விடயத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது உறுதிப்படுத்த முடியுமா? உங்களுக்கு திராணி இருந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள்…

  • பேத்தியாரும் காலமானார் ; அரவணைப்பின்றி வாடும் பிள்ளைகள்; ஆனந்தசுதாகரை விடுதலை கோரிக்கை

    பேத்தியாரும் காலமானார் ; அரவணைப்பின்றி வாடும் பிள்ளைகள்; ஆனந்தசுதாகரை விடுதலை கோரிக்கை

    தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலாவும் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி – மருதநகரைச் சேர்ந்த, அரசியல் கைதி ஆனந்தசுதாகரது மனைவியின் தாயார் தேவதாஸ் கமலா நேற்று புதன்கிழமை (19) திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான…

  • திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா

    திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா வெருகல் கலாசார மண்டபத்தில் இன்று (19) காலை நடைபெற்றது. இதன்போது மாவீரர் பெற்றோர் மேள தாளங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் தமிழ் தேசிய…

  • முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ; சட்டத்தரணி சுவஸ்திகா போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்

    முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ; சட்டத்தரணி சுவஸ்திகா போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்

    முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுதபோராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது. தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசுகளே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது.…

  • மூட்டை முடிச்சுக்களுடன் துரத்தப்பட்ட யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார்

    மூட்டை முடிச்சுக்களுடன் துரத்தப்பட்ட யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார்

    யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய…

  • பிரிகேடியர் விதுசாவின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் அரசியல்வாதிகள்

    பிரிகேடியர் விதுசாவின் தந்தைக்கு  இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் அரசியல்வாதிகள்

    தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் தந்தை கணபதிப்பிள்ளை கந்தையாவின் (கப்பூது ஐயா) இறுதிச்சடங்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கரவெட்டியில் நடைபெற்றது. இறுதி கிரியையின் போது, முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  

  • செம்மணி அணையா விளக்கை உடைத்த விசமிகளுக்கு சாட்டையடி

    செம்மணி அணையா விளக்கை உடைத்த விசமிகளுக்கு சாட்டையடி

    யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அணையா விளக்கு மீள நேற்று மாலை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டிருந்த அணையா விளக்கு இன்று மாலையில் மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி முன்னதாக இடித்தளிக்கப்பட்டிருந்தது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில்; ”அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட…