-
அருச்சுனா எம்பிக்கு எதிராக திரும்பிய சொந்த ஊர் மக்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது. அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது. அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன. குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி…
-
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை காணி ஒரு துண்டு கூட கிடைக்காது

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார் . பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.…
-
யாழ் மையவாத சில புல்லுருவிகள்; முல்லைதீவு எல்லைகிராமங்கள் இனி சிங்கள நகர்புறமாகும்

கரைதுறைபற்றின் தமிழரசின் தோல்விக்கு முழுகாரணம் தோழர் சிவஞானம் மற்றும் அவரோடு சேர்ந்து இயங்கும் யாழ் மையவாத சில புல்லுருவிகள் இந்த அரைவேக்காட்டை பதில் தலைவராக வைத்திருப்பதற்காக கட்சியின் பொதுசபைக்கு எதிராக வழக்குதாக்கல் செய்து அதை இயங்கவிடாமல் தடுத்து அந்த வழக்கை காரணம் காட்டி, பதவிவெறிபிடிதத்தவரான இவரூடாக இப்போது ஆட்சியை கவிஃத்த பெருமை எங்கட முல்லைதீவு மத்தியகுழு மந்தியை சாரும் ஆகவே இனி மக்கள் விழிப்படையாவிட்டால் இப்படியான அரைவேக்காடுகளால் தான் முல்லைதீவு எல்லைகிராமங்கள் இனி சிங்கள நகர்புறமாகும். அதற்கான…
-
கொக்குத்தொடுவாயில் சிங்களவர்களுக்கு இடமளிக்க முடியாது

முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்புத் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்வதால்,…
-
மாவீரர் தினத்தினை முன்னிட்டு முடங்கியது யாழ்ப்பாணம்

மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பானம் . தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும் , மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் தென்மராட்சியில் நடைபெற்றது. தென்மராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் , ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி…
-
யாழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகள் , சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு , பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு , வெடி கொளுத்தி பெரியளவிலான கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ,…
-
ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தயில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.…
-
எம்.பி அர்ச்சுனாவுக்கு சிறீதரனின் மகன் சவால்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி சிவஞானம் சிறீதரனின் மகன் சாரங்கன், எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு திறந்த சவால் ஒன்றை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில், “ஒரு சோலார் நிறுவனம் சாரங்கனுக்கு 30 மில்லியன் வழங்கி அனுமதி பெற்றது” என்று அர்ச்சுனா கூறியதாகவும், அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட அவர் கோரியுள்ளார். நீங்கள் என்னை பற்றி கூறிய விடயத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது உறுதிப்படுத்த முடியுமா? உங்களுக்கு திராணி இருந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள்…
-
பேத்தியாரும் காலமானார் ; அரவணைப்பின்றி வாடும் பிள்ளைகள்; ஆனந்தசுதாகரை விடுதலை கோரிக்கை

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலாவும் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி – மருதநகரைச் சேர்ந்த, அரசியல் கைதி ஆனந்தசுதாகரது மனைவியின் தாயார் தேவதாஸ் கமலா நேற்று புதன்கிழமை (19) திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான…
-
திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா
திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா வெருகல் கலாசார மண்டபத்தில் இன்று (19) காலை நடைபெற்றது. இதன்போது மாவீரர் பெற்றோர் மேள தாளங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் தமிழ் தேசிய…