-
திருப்பதியில் கொட்டித் தீர்த்த கனமழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திராவில் கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி மலைப் பாதையில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், ஸ்ரீவாரி மெட்டு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி செல்லும் மலைப்பாதையில் இரண்டு இடங்களில் பாறை சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…