சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லையென தமிழ் மாணவன் போராட்டம்


வவுனியா – பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து மாணவன் தனி நபர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

வலய கல்வி அலுவலகம் முன் மாணவன் சாத்வீக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார்.

மேலும், பெற்றோரின் சம்மத கடிதமும் பெறப்பட்டிருந்த நிலையில், குறித்த மாணவனை மட்டும் விட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Visited 1 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *