அபுதாபியில் இருந்து திருவனந்தபுரம் திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மைநோய் தொற்று!


கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய போது குரங்கம்மைநோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வகையான அம்மை தொற்றாகும் இது ஆப்பிரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்கு ஒன்றின் வைரஸ் மாதிரியில் இருந்து எடுக்கப்பட்டதனால் இதற்கு குரங்கம்மை என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த வைரஸ் கிருமிகள் மனித உடலுக்குள் நோய் தொற்றாக உருவெடுக்கும் பொழுது குரங்கமை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் தலைவலி மற்றும் சரும கொப்பளங்கள் உணர்வார்கள் அருளுக்கு கடும் காய்ச்சலும் ஏற்படக்கூடும்.

இந்த வைரஸ் கிருமிகள் மனித உடலுக்குள் நோய் தொற்றாக உருவெடுக்கும் பொழுது குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் தலைவலி மற்றும் சரும கொப்பளங்களையும் உணர்வார்கள் கடும் காய்ச்சலும் ஏற்படக்கூடும்.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் திரும்பிய 26 வயது நிரம்பிய இளைஞருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால்  பரியவரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்து கொண்டிருக்கின்றனர் அவரின் உடல்நிலை சீராக இருந்த போதிலும் மருத்துவரின் கண்காணிப்பிலேயே உள்ளார்.

மற்றொரு இளைஞருக்கு குரங்கமை தொற்றி இருக்கலாம் என்று சந்தேகம் உண்டாகியுள்ளது இவர் தலைச்சேரியைச் சேர்ந்தவர் துபாயில் இருந்து கேரளா திரும்பி உள்ளார் குரங்கம்மை போன்ற அறிகுறிகள் அவரிடம் இருப்பதால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டு வருகிறது ஆய்வகத்தினர் முடிவுகளை வெளியிட்ட பின்பு குரங்கம்மை பாதிப்பு தானா என்று மருத்துவர்கள் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

Visited 6 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *