யாழில் கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவால் சோகம்


யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆறு மாத கர்ப்பிணியாக பெண் குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில், வீட்டாரால் காப்பற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Visited 10 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *