டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்த இரு இளைஞர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்டிரைவ்கள் கைப்பற்றபட்டுள்ளன.

டுபாயில் இருந்து இன்றையதினம் (17-05-2024) காலை குறித்த 2 இலங்கைப் பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Visited 12 times, 1 visit(s) today
