டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரு இளைஞர்கள் கைது!


டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்த இரு இளைஞர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்டிரைவ்கள் கைப்பற்றபட்டுள்ளன.

டுபாயில் இருந்து இன்றையதினம் (17-05-2024) காலை குறித்த 2 இலங்கைப் பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Visited 12 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *